Proizvod vam ne odgovara? Nema veze! Možete nam vratiti unutar 30 dana
S poklon bonom ne možete pogriješiti. Za poklon bon primatelj može odabrati bilo što iz naše ponude.
30 dana za povrat kupljenih proizvoda
'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். பிறந்த மண்ணிலே சடுதியாக உடைவுகள் ஏற்படுவதற்குப் புலப்பெயர் வாழ்வு மட்டும் காரணமா? அல்லது உலகளவியதாக மாறிவரும் உடல் - உளம் சம்பந்தப்பட்ட மயக்கங்களினாலும், மாயையினாலும் அன்றேல் புதிய ஆய்வுகளினால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகளினாலும் அதிர்வுகளினாலும் ஏற்படுகின்றதா? இந்த இருள் சூழ்ந்த இடர்பாடுகளின் மத்தியில், சிக்கல்களின் படுமுடிச்சுக்களை அவிழ்க்கும் எத்தனத்திற்குள் ஈடுபடாது, புதுமையான கதைக் கருவையும், தொனிப் பொருளையும் இங்கு நாவலாக்கி தமிழ்ச்சுவைப்பிற்கு முன்வைத்துள்ளார் தியாகலிங்கம்.